கங்கையைக் காக்க
கார்வண்ணக் கண்ணன்
கலியுகத்தில்
கல்கி அவதாரம் விடுத்துக்
கண்டனன் முன்பெடுத்த
மச்ச அவதாரம்
அந்தோ..........
அசுத்தங்களை அகற்ற
அவதாரமெடுத்தவன்
அழுக்குண்டதால்
ஆயுள் இழந்ததாக
அரற்றிக் கொண்டிருந்தனர்
இழவுச் சொல்ல
இயமத்திற்குச் சென்றேன்
உமையவள்
ஓர் ஓரமிருக்க
சடையப்பன் - மூக்கை
சிந்திக் கொண்டிருந்தான்
ஆகச், செய்தி தெரிந்துவிட்டது
அடியேனுக்கு வேலையில்லை
என நினைத்து
அம்மையப்பரிடம் வினவினேன்
அவரோ
ஆக்ரா வாசிகளின்
அசுத்த நீர்
சடா முடியில் இறங்கியதால்
சகல நறுமணத்தையும்
சகிக்க முடியாமல்
மூக்கைச் சிந்தினாராம்
பெருக்கெடுத்த வெள்ளத்தை
பனித்துளி ஆக்கியவனும்
உயிரியல் தத்துவத்தை
தசாவதாரத்தில்
டார்வினுக்கு முன்
விளக்கியவனும்
மலைத்தும் மாண்டும்
இருக்க
சுற்றுசூழல் வாதிகள்
ஜஹனு முனிவரை
சல்லடை போட்டு
தேடுகின்றனர்
ஏனா?
கமண்டலத்தில்
கங்கையைப் பிடித்து
காதுவழி விட்ட
காலத்தின் பிரதிநிதியாயிற்றே
கமண்டத்தில் பிடித்தவுடன்
கழுவி விட
கானா காணும்
இவர்கள் யாரென்று
இன்னுமாத் தெரியவில்லை
பட்ஜெட் சமர்பித்து
பங்கு ஒதுக்கும்
பகல் கொள்ளையரை
பகல் கனா காணுகின்றனர்
திட்டம் தீட்டி
திங்கள் பலகடந்தும்
தீர்த்தக் கரை
தீட்டுக் கழியவில்லை
ஆம்
சடங்கென்று
சடலத்தை
ஜலசமாதி செய்து
சாதித்தது என்னவோ
காசிக்கு சென்றால்
ஆசை அர்ப்பணம்
சரி
தர்பணக் கழிவுகள்
மாசுக்கு சமர்ப்பணமோ
ஆலைக் கழிவுகளை
ஆற்றில் கலந்து
ஆளை விழுங்கி
ஆபத்தை உணர்த்தியும்
வேளை வரவில்லையென
வெட்டியாய் இருப்பதோ
ஓடையைச் சுத்திகரிக்க
ஓதுக்கிய பணம்
மடை மாற்றியதால்
மாண்டது திட்டம்
மாண்டது திட்டம்தானோ
மாக்களோடு மக்களும்
தாக்கீதுச் செய்தும்
தள்ளுபடிச் செய்கிறது - நீதிமன்றம்
நீதி மறுப்பென்றால்
நிச்சயம் இழப்புகள்
ஆம்
புற்றுநோயால்
கருவில் இருப்பது
கரையலாம்
உருவில் இருப்பதும்
உருகலாம்
தண்ணீர் இறக்குமதிக்கு
தனியாய் ஒப்பந்தம் வரலாம்
தங்கத்தை மதிக்க
யாருமில்லாமல் இருக்கலாம்
என்ன செய்யலாம்
நம்மை வாழ்விக்க
நஞ்சை உருவாக்காமலிருக்க
நம்மை நாம்
திருத்திக் கொள்ளலாம்
அல்லது
நமக்கு நாமே
மரணத் தேதி குறிக்கலாம்
திங்கள், மார்ச் 8
கண்ணன் காப்பானோ?
இதற்கு குழுசேர்:
கருத்துரைகளை இடு (Atom)
தேர்தல் 2024
நாட்டின் வளங்களை நாலு பேருக்கு விற்க நாடி வருகிறார்கள் நாள் 19 ஏப்ரல் 2024 பத்தல பத்தல பத்தாண்டுகள் என்றே பகற்கனவோடு வருபவனை பாராள அனுமதிப்...
-
நாட்டின் வளங்களை நாலு பேருக்கு விற்க நாடி வருகிறார்கள் நாள் 19 ஏப்ரல் 2024 பத்தல பத்தல பத்தாண்டுகள் என்றே பகற்கனவோடு வருபவனை பாராள அனுமதிப்...
-
குறள் 1091 இருநோக்கு இவளுண்கண் உள்ளது ஒருநோக்கு நோய்நோக்கொன் றாய்நோய் மருந்து அஞ்சனம் தீட்டிய அவளின் கண்கள் கொஞ்சி அழைத்து குற்று யிராக்கி...
-
பாரதமாம் பஞ்சப் பாண்டவர்களாம் பக்தி இலக்கியமாம் பாராய்!! கதை கேளாய்!! மானிரண்டு மையலிலே மன்னன் பாண்டுவோ காட்டில் வேட்டையிலே கொன்றனன் ஆண்...
-
கர்நாடக சங்கீதம் கருவறை பொக்கிஷமா காப்பாற்ற வேண்டுமென கதறுதே ஓரு கூட்டம் ரஞ்சினியும் சுதாக்களும் ராக ஆலாபனையில் ரசாபாசம் உள்ளதென்றா ரசிகைய...
-
அத்தனை இன்பமும் அவனுட னிருக்க நித்தமும் கிடைக்க நிச்சய மேதுமில்லை வித்தைக ளனைத்தும் விளைந்திடும் பருவத்தில் அத்துபடி யாகிட அனைத்திலும் இன்பம...
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக