செவ்வாய், மே 1

துடைப்பக் கட்டைகள்


வாரான் வாரான் பூச்சாண்டி
  வாரணாசி கோட்டை தாண்டி
தெருவ கூட்டிக் காட்டுறான்டி 
  திமிருதானே தினமும் செய்வானா 
எருமை சாணம் பொறுக்குவானா 
  எங்கள் சேரிக்கும் வருவானா 
உரிமை ஓட்டை போட்டதால 
  ஒருநாள் கூத்தை காட்டுறானா

எட்டுத் தெருவை பெருக்கும்
  எங்க குருவம்மா கொண்டையா
விட்டு விட்டு போனால்
   வீசும் வாசனை என்னய்யா
துட்டு வேணுமா தாறேன்
   துடைப்பம் பிடிச்சு பாரேன்
முட்டுச் சந்து தெருவில்
   மூச்சடக்கி வாழ்வோம் வாயேன்

விளையாட்டு




ஒரு குடம் நீரூற்றி
ஒரு பூ பூக்க
ஒரு கூட்டம் சேர்ந்தது - அது
ஒரு காலமானது

ஆலமர ஊஞ்சலாடி
ஆங்கே தும்பி பிடிக்க
காயா பழமா என்று
ஓயாது விளையாடிய நீ

ஓடிப் பிடித்து
ஒளிந்து விளையாடியது
ஒரு காலமென
ஓய்ந்து போகாதே

தேடிப் பிடித்து
தேவையென அறிந்து
மனிதர்களோடு உறவாடி
மகிழ்ந்து விளையாடு

கூட்டாஞ் சோறு
மணல் வீடு
உப்பு மூட்டை
உனக்கானதே

கொலை கொலையா முந்திரிக்கா
திருடன் போலீஸ்
வகை வகையான விளையாட்டுகள்
வாழுமிட மெங்கே

மழைக் காலத்தில்
மடித்த காகிதம்
கப்பலேறி விட்டதோ
கனவாகி விட்டதோ
  
நூங்கு வண்டி
கில்லி தாண்டு
கோலி விளையாட்டு
காலியாகி போனதோ

மாஞ்சா நூலில்
மடுவங் கரையில்
மாலையில் விட்ட பட்டம்
மறைந்து போனதே

ஆறு குளமென்றும்
கிணற்று வெளியிலும்
குதித்து நீச்சலடித்தது
வரண்டதோ - காவேரியா

பலிஞ் சடுகுடு
குதிரை தாண்டுதல்
பம்பரம் சுற்றியது
நின்று போனதே

ஆடுபுலி யாட்டம்
தாயக் கட்டை
சொக்கட்டான்
பரமபத மடைந்ததோ

கைப்பந்து கால்பந்து
கூடை பந்து
கைப்பற்றியது
மட்டைப் பந்து

மல்லர்கள்
சிலம்பச் செல்வர்கள்
வில் வித்தையாளர்கள்
இராமனைத் தேடிச் சென்றனரோ
  
இளவட்ட கல்தூக்கி
மஞ்சு விரட்டி
வழுக்குமர மேறி
உரியவளை கைப்பிடிக்க

தட்டாங்கல், தாயம்
பல்லாங் குழி என
பாவை விளையாடியவை
நொண்டியானதோ

கிச்சு கிச்சு தாம்பளம்
குரவை யாட்டம்
கரகர வண்டியேறி
காணாமல் போனதோ

அக புற விளையாட்டுகள்
பருவ பாலினத்திற்கேற்ப
அந்தோ அவையாவும்
அன்ட்ராய்டு விளையாட்டாய்

செல்பேசி விளையாட்டில்
ஜெயிக்க முடியாதாம்
சிலிர்த்து கொண்டனர்
சிறுவனின் பெற்றோர்

டெம்பிள் ரன்
புளு வேல்
காம்பட் பைட்
கணிப்பொறியில் சிக்கியது

ஓட்டி உறவாடுவது
எட்டிப் போனது
சுட்டி டிவியும்
வெட்டிக் கதை பேசுது - ஆக

எல்லோரும் கூடி
எக்காளமிட்டு விளையாடும்
எங்கள் பண்பாடு
என்று மீளும்



மேல்பாதி திரௌபதி

ஆறுகால ஆராதனையின்றி அம்மன் அவதியுறுவதாய் ஆங்கொரு புலம்பல் அரவமில்லாது ஆலயத்தை திறந்து ஆராதனை முடிந்தவுடன் மூடிடவும் பக்த கோடிகள் பக்கம் வந்த...