திங்கள், பிப்ரவரி 17

இந்துவா நீ


எப்படி நீ
இந்து ஆனாய் – ஆனால்
தப்பாய் சொல்லாதே 

கருணாநிதி
அகராதி தேடி
இந்துவுக்கு விளக்கம் சொல்வார் 

மவுண்ட் ரோடு
மகா விஷ்ணு என
மெட்ராஸ் வாசிகள் சொல்வர் 

இந்து ………. சரி
எந்த வகையறா… - அட
யார் வகுப்பது 

முனிக்கும்
பச்சையம்மாளுக்கும்
தீ மிதிக்கையில் 

சனி
சத்தமில்லாமல் வந்தததால்
இந்துவானாயா

அய்யனாரும்
இசக்கியும்ஆடிய
தாண்டவத்தில் 

பிள்ளையரப்பன்
பித்து பிடித்து நின்றதால்
இந்துவானாயா

 சுடலையும்
பேச்சியும்
பேசாதிருந்த போது 

பெருமாள்
பள்ளி கொள்ள
இந்துவானாயா

நடுகல்லை வணங்கிய இடத்தில்
நைசா துண்டு போட்டு 
இந்துவானாயோ

ஊருக்கு வெளியில்
உக்கிரமாய் நின்ற நீ
எப்படி இந்துவானாய்

கம்புயூட்டர் படித்து
கையில் காசு பார்த்ததால்
ஜென்ம பூமியில்” எழுப்பும்

செங்கல் அய்யனாரோடு
கருங்கல் பிள்ளையார் அமர
இந்துவானாயோ

ஆடு கோழி வெட்டியா – அல்ல
அரோரா என்று சொல்லி
இந்துவானாயா


சங்கராச்சாரியும் ‘அக்யுஸ்ட்’
சாதிக்கொரு ரவுடியும் ‘அக்யுஸ்ட்’ – இந்த
சமதர்மத்தால் இந்துவானாயா

கண்ணப்பன் நாயனரானார்
காஞ்சிபுரம் ‘அக்யுஸ்ட்’ ஆனது – இந்த
திருவிளையாடலால் இந்துவானாயா?   
  
இரட்டை குவளையும்
இட ஒதுக்கீடும்
இந்துவென நிலைநிறுத்தவா?

மேலவளவும்
மண்டைக்காடும் – நீ
பெரும்பான்மை என சொல்லவா

ஐந்தை பெற்றாலும்
பேதமின்றி பெற்ற
கருவறை இதுவென்பாள்

கருவறை நுழையாது
கடவுளை அர்ச்சிப்பவன்
எந்த இந்து

கருவறைக்கு உள்ளே ஒருவரும்
கருவறைக்கு வெளியே பலரும்
காட்டுதே இந்து யாரென?

நால் வருணமாய்
நானூறு சாதியாய்
பிரித்தாளே இந்து “பராசக்தி”

ஜகம் நீ
ஜகத்காரணி நீ – என
உருகிய பண்ணைபுரத்தான்

அல்லாவை
அண்ட வைத்த காரணி
இந்துதானோ?
  
சம்புகன், ஏகலைவன்
நந்தன் வந்து சொல்லுவானா – நான்
இந்துவென

உன் அடையாளம் இழந்து
ஏன்  இந்து  இந்துவென
ஏமாற்றிக் கொள்கிறாய்?

இந்து என்பதை விட
இவ்வுலகில் – மதமின்றி
மனிதனென இருந்து பார்







வெள்ளி, பிப்ரவரி 14

ரௌலட் சட்டமும் ராட்சசியும்



நான் கண்ணனோ
நீ ராதையோ
அல்லதான்

கண்களால் கவனித்து
கனிந்த இதயத்தால்
காதலர்கள்தான்

அடியே
ஆயினும் என்ன
அவசரச் சட்டம்

பிப்ரவரி 2014 ல்
பேசாமல் வதைக்கும்
ராட்சசியே

மார்ச் 1919-ல்தான்
ஆங்கில சர்காரின்
ரௌலட் சட்டம்

பேச்சும், எழுத்தும்
ஒத்த கருத்துடையோரும் – அன்று
கூடுவது தடையாயிருந்தது

கல்யாண ஊர்வலமும்
கனியகனிய பேசுதலும்
கூடுதலுக்கு வழியடி

காரணமின்றி கைதாவது
காதலிலும் உண்டு – அந்த
ரௌலட்லிலும் உண்டு

சந்தேகப் படுதல்
உன்னிலும் உண்டு
உரிமையற்ற அதிலுமுண்டு

விசேட நீதிமன்றத்தில்
விதியின்றி விசாரிப்பர்
மேல்முறையீடும் இல்லாதென்பர்

வாதமும் மேல்முறையீடும்
வாய்தா இல்லா வாய்ப்பு
வாழ்க்கையில் இணைய

உயிர்
மாட்சிமை தங்கிய
மன்னரின் கருணை

ஆம். தேவி
கருணை வேண்டுமடி - உனது
கண்ணாளன் நானடி

சத்தியாகிரகம், ஒத்துழையாமை
சட்டென்று நிறுத்தினார்
உத்தமர் காந்தி

உத்தமியே
ஊடலின் துன்பத்தை
உடனே நிறுத்தடி

ஜாலியன் வாலாபாக்
ரௌலட் சட்டம் – அது
சூரியன் அஸ்தமிக்காத சாம்ராஜ்யம்

வாலிபன் வாழ
தடா, பொடா தவிர் – இது

இந்திய குடியரசுயாயினும்

மேல்பாதி திரௌபதி

ஆறுகால ஆராதனையின்றி அம்மன் அவதியுறுவதாய் ஆங்கொரு புலம்பல் அரவமில்லாது ஆலயத்தை திறந்து ஆராதனை முடிந்தவுடன் மூடிடவும் பக்த கோடிகள் பக்கம் வந்த...