சனி, ஜூன் 9

முஸ்லீம் என்றால்

15 வயது முஸ்லீம் பெண் தனக்கு பிடித்தவரை திருமணம் செய்து கொண்டார்.  உயர் நீதி மன்றம் சொல்கிறது இந்து பெண் 18வயதுக்கு குறைவாக திருமணம் செய்து கொண்டால்தான் தவறு, தண்டனை உண்டு.

நீதி மன்றறம் முஸ்லீம் பெண் 15வயதில் தாரளமாக திருமணம் செய்து கொள்ளலாம் தவறில்லை என்று காதல் கணவனோடு அனுப்பி வைத்து விட்டது.

இங்கே பெண் பெண்ணாக பார்க்கப்படுவதில்லை, மதமாக, சாதியாக போகப் பொருளாக பார்க்கப்படுவதால் இந்த நிலைப்பாடு

அடுத்து வித்தியாசமான நிகழ்வு

அசாம் சட்ட மன்ற உறுப்பினர் ரூமி நாத் என்ற பெண் தன் கணவன் மற்றும் குழந்தையை விட்டு விட்டு முஸ்லீமாக மதம் மாறி முஸ்லீம் ஒருவரை இரண்டாவதாக திருமணம் செய்து கொண்டார்.

முதல் திருமணம்??????????

அதான் முஸ்லீம் 5 திருமணம் செய்து கொள்ளலாமே

ஆண் மட்டும்தான் 5 திருமணம் செய்யலாமா?

இதோ மக்கள் பிரதிநிதி ஒரு முன்னோடியாக மதம் மாறி செய்து கொண்டார்.

யார் இந்த ஆயுதத்தை (5 திருமணம்) எடுத்துக் கொள்கிறார்கள், மதம் மாறுபவர்கள், தவறு செய்பவர்கள்

பாராட்டுவோம் மக்களே

திங்கள், ஜூன் 4

ஊடலும் கூடலும்

 



ஊடி யவரை உணராமை வாடிய 
வள்ளி முதலரிந் தற்று.                                                  குறள் 1304

வாடிய கொடிக்கு
வாளி நிறைய
நீருற்றுவது போல்

கொண்ட கோபம்
குறைய
கூடி மகிழ்

அஃதன்றி
கோபம் கூடின்
கொடு வாளால்
கொடி சாய்ப்பதாகும்

சனி, ஜூன் 2

கண்கள்

கண்டார் உயிருண்ணும் தோற்றத்தால் பெண்டகைப்
பேதைக்கு அமர்த்தன கண்.                                                        குறள் 1084




போர்குணமாய்
பேதையின் -கண்கள்
ஆயினும்
அமைதி தவழும்
அணங்கவள்

முரணாய்
உயிரை பருகவோ -அல்ல
உள்ளம் உருகவோ
ஏனிந்த மறுபாடு
என்னவளே

மதங்கொண்ட கொங்கை



கடாஅக் களிற்றின்மேற் கட்படாம் மாதர்
படாஅ முலைமேல் துகில்.                                   குறள் -1087



உன்
முன்னழகை
மூடிய துணி

மதங்கொண்ட
ஆனையின்
முகமறைத்த
முகப்படாம் போல




வெள்ளி, ஜூன் 1

காவலர்கள் உங்கள் நண்பன்

இது சென்னை காவல் துறையின் வசனம்

ஆனால் நேற்று சென்னை பல்கலையின் பேராசிரியர் ஒருவரை தலைகவசம் அணிய வில்லை என்பதற்காகவும், அபராதம் செலுத்த மட்டேன் என உறுதியாக இருந்ததாலும் எப்படி நடத்தினார்கள் என்பது செய்திதாளிகளின் படங்களை பார்த்து தெரிந்திருப்பீர்கள்.

படித்த மக்களுக்கு இந்த கதி என்றால் பாமர மக்களை இந்த போலீஸ் எப்படி நடத்தும்.  நாம் காணாததா? வச்சாத்தி, சிதம்பரம் பத்மினி, வீரப்பன் தேடல்கள்

உடுக்கை இழந்தவன் கைபோல இது வள்ளுவன் வாக்கு
யாராயிருந்தாலும், எதுவாக இருந்தாலும் சட்டையைபிடி இது தமிழக போலீஸின் மந்திரம்

நாம் என்ன செய்ய முடியும்

தேர்தல் 2024

நாட்டின் வளங்களை நாலு பேருக்கு விற்க நாடி வருகிறார்கள் நாள் 19 ஏப்ரல் 2024 பத்தல பத்தல பத்தாண்டுகள் என்றே பகற்கனவோடு வருபவனை பாராள அனுமதிப்...