சனி, அக்டோபர் 29

புரட்சி


புரட்சித் தலைவர்
புரட்சித் தலைவி
ஆம் உங்களுக்கு
புரட்சி தெரியும்

வச்சாத்தியும்
மகாமக குளமும்
பரமக்குடியும்
நேற்றின்றைய புரட்சிகள்

லிபியாவிலும்
புரட்சிப் படை
42 ஆண்டுகள் ஆட்சியை
அகற்றியது

புரட்சியால்
புதிய உலகமானதோ
மாற்றங்களால்
மக்கள் மகிழ்ந்தனரோ

குமுதம், ஜூவி.போல்
சன், மிரர், கார்டியன்
நேட்டோவின், அமெரிக்காவின்
புகழ் பாடின

ஊழல் செய்தாலும்
போலீஸ் கொன்றாலும்
சட்டம் ஒழுங்கும்
மனித உரிமைகளும்

காக்கப்பட்டதாக
காகிதத்திலும்
காணொளி செய்திகளிலும்
நீலிக்கண்ணீர் வடித்தனர்

போர் முடிந்தது
செய்திகளும் முடிந்தது
ஆனால்
உண்மைகள்

கஷ்மீரத்திலும்
இலங்கையிலும்
லிபியாவிலும்
நுகர்வு பொருள்- பெண்கள்

ஆப்ரிக்காவின் வடக்கு
அரபுகளின் தேசம்
ஆயினும் கருப்பர்கள்
அத்தேசத்தை கட்டியமைத்தனர்

புரட்சியால் கருப்பர்கள்
புலம் பெயர்ந்தனர் – ஆம்
பாப்பாத்தியின் ஆட்சியில்
சூத்திரர்கள் வாழ முடியுமா?

அகதி முகாமென்பது
பெண்களுக்கானது
வீரப்பன் வேட்டையில்
வச்சாத்தியும் அப்படியே

போரிலும்
போருக்கு பிந்தியும்
துப்பாக்கி முனையில்
பெண் போகப் பொருளானாள்

போருக்கு பிந்திய
லிபியா
புரட்சியின் தலைமையிலிருக்கும்
தமிழகம்

போர்டும், ஹுண்டாயும்
போட்டியிடுவதை போல்
அமெரிக்க, சீன
எண்ணை நிறுவனங்கள்

அம்பானியை கண்டுபிடிக்கலாம்
அங்கொரு கையாளாக
அள்ளஅள்ள குறையா
எண்ணையை சூறையாட

என்ன செய்வோம் தமிழர்களே
லிபியாவும் தமிழகமும்
ஒன்றென
நிம்மதியாய் தூங்குவோம்








வியாழன், அக்டோபர் 27

மாயக்கல் மோதிரம்


அயல்நாடு சென்று
ஆயிரமாயிரம் சம்பாதிக்க
அதிர்ஷ்ட மோதிரம்
ஆவண செய்தால்
அவனவன் ஏழையாயிருக்க
ஆமோதிப்பானா

மலடியென பேரெடுக்க
மானுடம் விரும்புமா
மாயக்கல் மோதிரம்
மழலையை வழங்குமென்றால்
மாதர்தான் எதற்கு-திரு
மணம்தான் எதற்கு

செவ்வாய் என்பது
நாளும் கோளூமாகும்
வருவாய் தேடுபவர்க்கு
தோஷமாகும்
இயலாமைகளுக்கு – அது
மற்றொரு வேஷமாகும்

காணி நிலம் வாங்க
கல் மோதிரம்
கருணையளித்தால்
பராசக்தியிடம் வேண்டிய
பாரதி கூட
பாதை மாறியிருப்பான்

வீடு கட்ட
வேண்டும் பணம்
வேதனையப்பா – இதில்
வேகத்தடையாம்
விலக்குதாம்
விவராமான மோதிரம்

தொழிலில் தேக்கமெனில்
தவறுகள் ஏதுமிருக்கலாம்
மோதிரம் அணிந்து
மொட்டை போடுவாயா
தவறை திருத்தி
சாதனை செய்வாயா

வாழ்க்கை துணைத் தேட‘
வண்ணகல் மோதிரம்
வழி செய்யுமென்றால்
வரதட்சணை எதற்கு
விவாகரத் தெதற்கு-அட
வாலிப மெதற்கு

அவனிவன் அணிந்து
ஆகாவென்று ஆனான்
அதெல்லாம் கட்டுக்கதை
அந்த மோதிரம்
விற்ற கடை
அதோ கதியானது
தனிக்கதை





திங்கள், அக்டோபர் 24

இயல்பாய் இருத்தல்

நீ இருப்பதை
நான் உணராமல் போனேன்

வீடு என்னவோ
மகிழ்ச்சியாகதான் இருக்கிறது

குழந்தைகள்
குதுகலித்துக் கொண்டிருக்கிறார்கள்

ஆயினும்- ஓர்
அன்னியம் வீட்டில்

உன் குரலோசை
குயிலாக இல்லை

உடலசைவுகள்
உள்ளத்தை சொல்லவில்லை

கேலி பேச்சுக்கள்
காணவில்லை

இணைந்துண்ணும்
இன்பம் இல்லை

உனக்காவோ எனக்காகவோ
எந்த பேச்சுமில்லை

பணிக்கு வழியனுப்பும்
பாங்கு மாறிவிட்டது

ஊடலும் கூடலும்
ஒதுக்கி வைக்கப்பட்டது

உன்னியல்பு மாறவில்லை என
உற்றார் உறவினர் புகழ்ந்தனர்

நானும் அறிவேன்-ஆயினும்
மாறிதான் இருந்தாய்

விருந்தோம்பலின் பொருட்டு
விடுமுறை அளித்தாயோ

திங்கள், அக்டோபர் 17

உலகம் விழிக்கிறதோ?

அமெரிக்காவில் டைம் ஸ்கொயரில் மக்கள் திரள், ஐரோப்பாவில், ஆசியாவில் என மக்கள் அங்காங்கே திரள்கிறார்கள்.  ஆம் இருப்பவனுக்கும் இல்லாதவனுக்குமான இடைவெளி நீண்டு கொண்டிருக்கிறது என்பதற்காக.

காரணம் கண்டு பிடித்து விட்டார்கள் மக்கள். முதலாளித்துவத்தின் பேராசை.
ஆனால் சரியான தலைமையில்லை வழி நடத்த.  தள்ளுமுள்ளுவோடு முடிந்து விடும் போல் உள்ளது இந்த போராட்டம்.

பங்கு சந்தைகள்தான் காரணம், பணத்தை இழப்பதற்கு என்று கண்டுபிடித்திருக்கிறார்கள்.   அதனால்தான் அதைச் சுற்றி போராட்டம்.  ஆம் சும்மா இருந்து சம்பாதிக்க ஆசைப்பட்டால், ஏமாற்ற ஆட்கள் கிளம்பி விடுகிறார்கள்.

எனினும் பேராசை விடப் போவதில்லை.  போராட்டம் ஓய்யபோவதில்லை

வெள்ளி, அக்டோபர் 14

இந்தியா 12வது இடத்தில்

உலக கோடீஸ்வரர்கள் வரிசையில் இந்தியாவிற்கு 12வது இடம்.    (High Networth Individuals) HNIs  நாளுக்கு நாள் அதிக சொத்து மதிப்புள்ள கோடீஸ்வரர்கள் உயர்ந்து கொண்டிருக்கிறார்கள்.  ஏழைகள் எண்ணிக்கையும் உயர்ந்து கொண்டிருக்கிறது.

ஒரு ஆய்வறிக்கை சொல்கிறது 2008-09 காட்டிலும் 2009-10 ல் அதிக சொத்து மதிப்புள்ள கோடீஸ்வரர்களின் எண்ணிக்கையோடு சொத்து மதிப்பும் 22%  உயர்ந்துள்ளது.  அதாவது 477 பில்லியன் டாலராக இருந்த சொத்து மதிப்பு 582 பில்லியன் டாலராக உயர்ந்துள்ளது.

எப்படி இவர்கள் சொத்து மதிப்பு உயர்ந்தது.   இவர்கள் தங்கள் பணத்தை பங்கு வர்த்தகத்திலும்,  தங்கத்திலும்,நிலங்களிலும் முதலீடு செய்துள்ளனர்.

2009 ல் 126,700 பேர்களாக இருந்த அதிக சொத்துடைய தனிநபர்கள் 2010 ல் 153,000 மாக உயர்ந்துள்ளனர்.

110 கோடி மக்கள் தொகையில் இது சாதரணம்.

ஆனால் 110 கோடி மக்களில் செல்வத்தை 153,000 வைத்திருக்கிறார்கள் என்றால்................-?

திங்கள், அக்டோபர் 10

தற்கொலை

அவன்-ஆத்திரக்காரன்
அவள்-அவசரக்காரி

இழந்தது-வாழ்க்கை

அவன்- வாழ்க்கை இழந்தான்
அவள்-வாழ்வை முடித்துக் கொண்டாள்

அனாதை-10 மாத பெண் குழந்தை

இழந்தபின்பு புலம்பி என்ன பயன்

சுடுசொற்கள் சுட்டுவிடும் என்பார்கள்

வள்ளுவன் சொன்னான்

செல்லிடத்துக் காப்பான் சினங்காப்பான் அல்லிடத்துக்
காக்கினென் காவாக்கா லென்


உன் துணையிடத்தில் கோபத்தை காண்பிக்க உரிமையுண்டு எனினும் அதை காட்டாதே என்று

கோபத்தின் அளவு தாண்டும் போது

இதோ துணையை வாழ்க்கையை இழந்து நிற்கிறான் தம்பி


செவ்வாய், அக்டோபர் 4

ஓப்பந்தம்

கண்மணி அன்போடு
காதலன் நான்....நான்.....
எழுதும் கடிதம்....லெட்டர்


மனசாட்சி பற்றி
உள்ளாட்சி தேர்தலில்
உளருகிறாய்

உறவுகள் முறிந்தபின்
தொந்தரவு செய்கிறாய்
கூட்டணி வேண்டுமென

பறந்து பறந்தடிக்கும்
இளைய தளபதி-ஒரு படத்தில்
ஒருவருட ஒப்பந்தமென்றான்

ஒய்யார கொண்டை
ஓபாமா தேசத்தின்
கீழிருக்கும் மெக்சிகோவில்

ஈராண்டு ஒப்பந்தமென்றான்
வர்த்தக ஒப்பந்தமல்ல
வாழ்க்கை ஒப்பந்தம்

அரசே அரசாணையிட்டு
ஆவண செய்கிறதாம்
ஆசைப்பட்டால் நீட்டிக்கவும்

அல்லவென்றால்
அவரவர் வழி
குழந்தை செல்வம் வரை

அரசும் சமூகமும்
ஆய்ந்தெடுத்த முடிவா
அடுத்தகட்ட நாகரிகமா





மேல்பாதி திரௌபதி

ஆறுகால ஆராதனையின்றி அம்மன் அவதியுறுவதாய் ஆங்கொரு புலம்பல் அரவமில்லாது ஆலயத்தை திறந்து ஆராதனை முடிந்தவுடன் மூடிடவும் பக்த கோடிகள் பக்கம் வந்த...