செவ்வாய், மே 31

கடவுளை உருவாக்கியவர்களின் கனவு

இது எனக்கு வந்த ஒரு மின்னஞ்ஞல்.  கடவுளை உருவாக்கியவர்களின் எதிர்கால கனவாகதான் எனக்கு தோன்றியது.  படித்து மகிழுங்கள்.
 
Techie God
Over the past several years, we have all learned to live with IVRS - 'Inter-active Voice Response System' as a necessary part of modern life. What would happen if God decides to go hi-tech and installs voicemail? 
 
Let us imagine a scenario. You dialled God's number.
 
'Hi! Thank you for calling God. Please select one of the following:
 
If you are Christian, dial 1
All Hindus, dial 2
All Muslims, dial 3
All others, dial 0.'
 
So, lets say you are a Hindu and you dialled 2. Here is what you hear:
 Press 1 for Requests
Press 2 for Thank you messages for God
Press 3 for Complaints about unfulfilled promises
Press 4 for All other inquiries.
If your prayers are still not answered, dial '0' and ask for Naradmuni.'
 Or, if all Gods were busy, you might hear this:
 'We are sorry, all our Gods are busy helping other Bhaktas and Sinners. However, your prayer is important to us and will be answered in the order it was received. Please stay on line. One of the Gods will be with you soon.' 
Or, it could even go this way when you start praying: 
'If you know your God's extension, dial it now.' 
Or, you might hear this: 
'If you would like to speak to Ganeshji, Press 1.
For Lord Hanuman, Press 2.
For Lord Krishna, Press 3.
To confess your sins, press 4.
To ask for favours, Press 5.'
 Or, you might even hear this:
 'You have reached Lord Krishna's extension. I am going to be away to conduct a special yuddha to save the humanity and will be away until the year 2012. If this is something urgent and cannot wait until then, call Shankara at GB +44  779000020000  Call. If you want to speak to someone else, for other gods' directory, Press 6 now.' 
Or you might even hear something like this if you call toward the end of your life cycle:
 'If you think you have reservations at our Heavenly Resort, please provide your name, social security number and be ready to provide the proof of your eligibility. If you do not have the proof of eligibility, please dial 420-HELL and ask for General Manager Ravana, who will be happy to help you.' 
Or, depending on the purpose of your call, you might hear this:
 'If you are calling to find out if a loved one has been assigned to Heaven, Press  5, enter his or her 'mantra' number, then press the 0 key. If you get a negative response, try area code 420-HELL.' 
For all you know in this day and age of quotas and all, you might even get a response like this:
 'Our computer records show that you have already prayed once today. Please hang up and try again tomorrow.'
 Or you might even here this if you call on the wrong day:
 'This Main Office of Heaven is closed for DIWALI holidays. If this is an emergency, you may try our Himalayan Retreat in the mean time by dialling 6000-31,000.'
 So, let us hope and pray that God never learns about computers - because if he does, we are in BIG trouble!

திங்கள், மே 23

கண்ணாளா

கோடைக் காலம்
குளு குளு
குலு மணாலி
செல்லலாமா

கிர்ணி, தர்பூசணி
இவற்றோடு
இளநீர்
பருகலாமா

தகதகக்கும் வெயிலில்
தகிக்கும் தேகம்
சுகிக்க வழி
சொல்லாயோ

குளிர்ந்த மோரோ
குடிக்க தண்ணீரோ
குளிர்சாதன கடைக்கு
கூட்டிச் செல்வாயோ

கோடையில் குதுகலிக்க
காதல் கண்ணாளா
கன்னியின்
கனவுகள் இவை

எண்ணங்களை
ஏட்டில் ஏழுதவில்லை
என் கண்ணில்
எழுதி வைத்தேன்

கண்டாயோ என்னவோ
கட்டிபிடி என்றாய்
கட்டுப் பட்டேன்
களிப்புற்றேன்

குற்றால அருவியோ
குளிர்ந்த காஷ்மீரோ
சிலிர்த்து உறைந்தேன்
சில்லென்ற நின்தேகத்தாலே

சனி, மே 21

வீடு


எலியும் பூனையும்
இன்ன பிற
“ஜந்துக்கள்” வசிக்க
எளிதாய் இருப்பிடம்
கண்டு பிடித்துவிடுகிறது

நான்கு சுவர்களுக்குள்
நாலும் நடப்பது
நாகரிகம் என்று
நகரினுள் தேடினேன்
நல்லதொரு வளை

மாட மாளிகைகள்
அடுக்கு மாடிகள்
புறாக் கூண்டுகள்
மாறா குடிசைகள்
தகுதிக்கேற்ற வளைகள்

விலைக்கென்றாலும்
வாடகைக்கென்றாலும்
“விஜ்டெரியன்” மட்டுமென
விளம்பரத்திலேயே சொல்லிடும்
விவரமானவர்கள்

லட்சத்தில்
லட்சணமான வீடு
லட்சிய இடத்தில் தேட
லாயக்கில்லை நாமென
பொருளாதாரம் சொல்லுது

அடுக்கில் ஒரு தளப்பகுதி
அதுவொரு கோடிக்கு மேல்
இடுக்கில் ஒரு பகுதியெனில்
இல்லை பல வசதிகள்
இருப்பினும் விலை இலட்சங்களில்தான்

ஆயிரங்களில்?…………..
ஆட்சி செய்வோர்
இலவச வீடென்றார்
அதுவொரு காடன்றோ
கடைகன்னியும் காத தூரமன்றோ

சராசரியும் நடுத்தரமும்
சந்தித்த வெளி
ஊருக்கு வெளி - ஆம்
புற நகரும்
புறா கூண்டுதான்

உழைப்பவனெல்லாம்
ஊருக்கு வெளியே
பேருக்கு வாழ்க்கை
ஆறு மணி வேலைக்கு
நாலு மணிக்கு புறப்பாடு

பேரூந்தோ இரயிலோ
போய் பிடிக்க
அரைமணி வேண்டும்
மருத்துவரோ மருந்தோ
பக்கத்து ஊருக்கு போக வேண்டும்

எப்படியோ
இந்த நகரில்
எல்லாம் கிடைக்க
இருபது ஆண்டு வேண்டும்

ஏரிக் குளமெல்லாம்
இல்லாதவர் இடமென
என்றிக்கையில்
வசதி வாரியமென
வாரி சுருட்டியது அரசு

எல்லோருக்கும் வளை
என்பது ஒரு கவலை
ஏக்கங்கள் கனவுகள்
என்று நிறைவேறும்?........
நன்று யோசியுங்கள்……….

வெள்ளி, மே 20

பெண் என்றால்

வேலைக்குச் செல்லும் பெண் என்றால் கேவலமா?  எப்படியும் வாழலாம் என நினைப்பவளா? இப்படியொரு கேள்வி என்னிடம்

ஒருசாண் வயிற்று உணவு, அதற்காகதானே உழைப்பு, உழைக்கதானே வெளியே  வருகிறோம். வெளியில் வருமிடம் பாதுகாப்பு நிறைந்தது என்றால்தான் நம்பிக்கை.

மனம் பாதித்த கேள்வி.  பதில் சொல்ல இயலாமல் தவித்து நின்றேன்.

வேலூர்

எத்தனையோ சிறப்புகள் உண்டு வேலூர் மாவட்டத்திற்கு.

நேற்று எனக்கு வேறுபட்ட அனுபவம்.  உறவுகாரர்களை பார்க்க பயணம். இனிப்பைக் காட்டிலும் பழங்கள் உடலுக்கு நல்லது என்பதால் பழைய பேருந்து நிலையம் அருகிலிருக்கும் பழ கடைக்குச் சென்றேன்.  ஆப்பிள் 1 கிலோ விலை ரூ.140 பேரத்தில் ரூ.10 தள்ளுபடி எடையை பார்த்தால் 750 கிராம்.  சரியென்று வேறு கடைக்கு சென்றேன். திராட்சை 1/4 கிலோ ரூ.30,      சரி 1/2  கிலோ கொடு என்றேன்.  600 கிராம் படிக் கல்லை வைத்து எடை போட்டால் 1/4 கிலோவிற்கும் குறைவான எடை.  பார்த்தேன் வேலூரில் பழம் வாங்கும் ஆசையே போய்விட்டது.

இது என்ன வாழ்க்கை. கண் முன்னே ஏமாற்றுவது.   அதற்கு கூறு கட்டி வியபாரிடமே வாங்கலாம்.  எவ்வளவுக்கு எவ்வளவு என்று தெரிந்தே வாங்குகிறோம்.  கேட்டது ஒன்று கிடைப்பது ஒன்று என்றால்......... அதுவும் ஏமாற்றபடுகிறோம் என்றால்...........

செவ்வாய், மே 17

கடவுளுக்கும் வேனிற்கால விடுமுறை


24 மணிநேரமும்
இகலோக மனிதர்களிடம்
சஞ்சரித்து
இம்சை கொண்டார்

பாவ புண்ணியங்களுக்கு
மன்னிப்பு அளித்து
பைத்தியம் பிடித்துவிட்டது
பரமபிதாவின் வாரிசுக்கு

ஓய்வு
உல்லாசம்
விடுமுறை
எதையோ சொல்லிக்கொள்ளுங்கள்

உழைத்து களைப்பவருக்குதான்
ஓய்வும் உல்லாசமா
உலகையே ரட்சிப்பவருக்கும்
ஓர் உல்லாசம் தேவைதான்

வெனீஸ் நகரத்தின்
வீதியுலாவை காட்டிலும்
வளைந்து நெளிந்து செல்லும்
கொண்டேலா படகு பயணம்
புது அனுபவம் – கடவுளுக்கு

ஆண்டவரின் பயணமென்றால்
அதற்கேற்ற
அணிவகுப்பு, அலங்காரம்
ஆகா கண்கொள்ளா காட்சி

தென்றலோ புயலோ
திசை திருப்பும்
வல்லமை கொண்டவர் – தன்
திருமுடி இழந்தார்

ஆம்
காற்றில் கிரீடம்
கழன்று விடுமென்று
கழற்றி வைத்து விட்டாராம்

விவசாயமும் வங்கி கடனும்



கடனின்றி நாடே இயங்க முடியாதபோது.  சாதாரண விவசாயி கடனின்றி வாழ முடியுமா?  விவசாயிகள் பயிர் கடன், தங்க நகை கடன், உழுபடைக் கருவிகள் வாங்க கடன் என பல கடன்கள் தேசியமயமாக்கப்பட்ட வங்கிகள் மூலம் பெறுகின்றனர்.  இதை தவிர்த்து கந்து வட்டிக்கு கடன் வாங்கி கந்தலாகி போவான்  அது தனிக்கதை.
60000 கோடி தள்ளுபடி, ஆக பெரும்பான்மை விவசாயிகள் மகிழ்ந்தார்கள் ஆனால் என்ன நடந்த்து.தேசியமயமாக்கப்பட்ட வங்கிகள் ஓர் ஆண்டு காலம் தள்ளுபடி என வசூலை தள்ளிப் போட்டனர்.  2010-11 ஆண்டில் மட்டும் தமிழகத்தில் குறைந்த்து 3000 க்கும் மேற்பட்ட டிராக்டர்கள் பறிமுதல் செய்யப்பட்டன விவசாயிகளிடமிருந்து.
டிராக்டர்கள், உழுபடை கருவியில் பிரதானம்.  ஆனால் இது நகரங்களில் உழுவதற்கு பயன்படாமல், மணல், செங்கல் கொண்டு செல்லவும், தண்ணீர் கொண்டு செல்லவும் பயன் படுத்தப்படுகிறது.
ஆனால் ஒரு விவசாயி எப்படி டிராக்டர் வாங்குகிறான் என்று கவனிக்க வேண்டும்.  முன்பெல்லாம் 10 ஏக்கர் நிலமுள்ள விவசாயி டிராக்டர் கடன் வாங்க வங்கியை அணுகலாம் என்றிருந்த்து.  ஆனால் தற்போது 4 ஏக்கர் நிலம் வைத்திருப்பவன் வாங்கலாம் என மாற்றியமைத்தனர்.  யாருக்காக என்பது?.........
ஒரு கிராமத்தில் எத்தனை டிராக்டர் தேவை என்பது முக்கியம்.  ஆனால் டிராக்டர் கம்பெனிகளுக்கு  ஒவ்வொரு விவசாயியும் டிராக்டர் வைத்திருக்க வேண்டும் என்பது கனவு.  
கூட்டு திட்டம் டிராக்டர் கம்பெனிக்கு விற்பனை இலக்கு.  வங்கி மேலாளருக்கு விவசாய கடன் இலக்கு.  அதனால்தான் தேவையே இல்லாமல் ஒரு கிராமத்தில் 10 டிராக்டர்களுக்கு மேல்.  சொந்த தேவைக்கு பிறகு வருமானம் ஈட்ட இயலாமல் வெறுமனே நிற்கிறது அந்த டிராக்டர்.   எட்டு லட்சம் முதலீடு முடங்கியது.  வட்டியும் கூடிக் கொண்டே செல்கிறது.
அரசியல்வாதிக்கு ஓட்டு வேண்டும்.  வருமானம் இல்லாமல் வட்டி கட்ட முடியாமல் இருக்கும் விவசாயி கண்ணுக்கு தெரிகின்றான்.  8% கூட்டு வட்டி தள்ளுபடியாகிறது.  அசல் அப்படியேதான் நிற்கிறது.
ஊடகங்கள் அலறுகிறது. வங்கியின் வாராக் கடனில் விவசாயக் கடன் இத்தனை சதவீதம்.  இலாபத்தில் வராக்கடன் ஓதுக்கீடு இத்தனை சதவீதம்.  இலாபம் குறைந்துவிட்டது என கூப்பாடு.

வங்கிகளின் தலைவர்கள் கூடினர். விவசாயிகளிடம் பறிமுதல் செய்வது என முடிவு அறிவிக்கப்படுகிறது. என்ன செய்வது விவசாயி மீண்டும் கடன்காரனாகிறான்.  இருக்கும் தங்கத்தையோ எதையோ விற்று மீட்கிறான் தன் மானத்தையும், டிராக்டரையும்.  முடியாதவன் தோற்றுப் போகிறான்.

இடைத்தரகர்கள், விற்பனை பிரதிநிதிகள்,  வங்கி மேலாளர்கள், பணத்தோடு பதவி உயர்வு பெற்று சென்று விட்டனர்.  வண்டி வாங்கியவன் கௌரவம் கொண்டான்.  எத்தனை நாட்களுக்கு............
தற்போது பறிமுதல் செய்வதற்கு இலக்கு.  தஞ்சை மாவட்டத்தில் மட்டும் ஒவ்வொரு வங்கி கிளையிலும் 100 முதல் 150 க்கும் மேற்பட்ட டிராக்டர்கள் பறிமுதல் செய்ய ஆணை பிறப்பிக்கபட்டிருக்கிறது.  இவை அனைத்தும் தேசியமயமாக்கப்பட்ட வங்கிகளின் நடவடிக்கை.  தனியார் வங்கிகளும், வங்கி சாரா நிதி நிறுவனங்களும் இதைதான் செய்கின்றன.

எட்டு லட்சத்திற்கு வாங்கிய டிராக்டர் பறிமுதல் செய்யப்பட்ட பின் மூன்று முதல் நான்கு லட்ச ரூபாய்க்கு விற்க்கப்படுகிறது.  நாள்தோறும் செய்தி தாளை பாருங்கள் வங்கிகள் டிராக்டர்களை ஏலம் விடும் அறிவிப்பு வெளியாவதை. சமீபத்தில் வங்கியின் ஏல நடவடிக்கையை ஓர் ஆர்பாட்டம் மூலம் தடுத்து நிறுத்தின்ர்.  அது தற்காலிகமானது. எப்படியும் பணம் கட்டினால்தான் டிராக்டர் விடுவிக்கப்படும் அல்லது மீண்டும் விற்கப்படும். விற்பனைத் தொகை கடனில் கழிக்கப்பட்டது.   மீதி தொகைக்கு வங்கி நீதிமன்றத்தில் வழக்கு தொடுக்கிறது.   பாடுபட்டுழைத்த பணத்தை பறி கொடுத்தவன் நீதி மன்றம் ஏற வேண்டும்.  முடிவில் ஈடாக கொடுத்த நிலத்தை இழக்கிறான்.  உழவனோ ஓட்டாண்டியாகிறான்

சனி, மே 14

மகிழ்ச்சி

மகிழ்ச்சி இதை மற்றவர்களோடு பகிர்ந்து கொள்ளும் போது அதன் அளவு அதிகரிக்கிறது.  நானும் ஒரு செய்தியை தளத்தில் எழுத வேண்டும் என எண்ணும் போது எனக்கு முனனே தங்களின் மகிழ்ச்சியை இங்கே இவர்கள் பகிர்ந்து கொண்டார்கள்.  இது நாடு முழுதும் தொடர வேண்டும் என்று கருத்திட்டிருக்கிறார்கள்.

எனது எண்ணமும் அவர்களோடு ஒத்துபோவதால் அவர்களின் எழுத்துக்களையே படியுங்கள்

குருத்து
கவிதை வீதி
கிருஷ்ணமூர்த்தி
சங்கரியின் செய்திகள்

தம்பையா

சென்னையின் பெரும்பான்மை மக்கள் மட்டுமல்ல உலகில் பல்வேறு மக்கள் அறிந்த மிகச் சிறந்த தோல் சிகிச்சை மருத்துவர் தம்மையா அவர்கள் மரணம் அடைந்து விட்டார்.  தாசப்பிராகாஷ் எதிரில் அவருடைய மருத்துவமனையில் எப்போதும் நீண்ட வரிசை இருக்கும்.  எல்லோரும் வரிசையில்தான் வர வேண்டும். டோக்கன் கிடையாது. அப்பாயின்மெண்டு கிடையாது.  ரூ. 30 தான் அவருடைய பார்வை கட்டணம்.

செய்தியை கண்டேன்.  மருத்துவதை மணந்து கொண்டதால் தனக்கு தனிப்பட்ட துணையை கொள்ள வில்லை என.  1948 மருத்துவத்தில் தேர்ச்சி பெற்று இத்தனை ஆண்டு காலம் மக்களுக்கான சேவை செய்த ஒரு மருத்துவர் இன்றில்லை நம்மிடையே.  அவரின் சேவையை அவருடை மாணக்கர்கள் கண்டிப்பாக தொடர்வார்கள்

போராட்டம்

கருணைமிக்க இளம் தலைவர் ராகுல்  விவசாயிகள் பாதிக்கப்பட்டார்கள் என்று கண்விழித்து, மோட்டார் சைக்கிள் பயணம் செய்து இரவு வரை போராடி போலீஸரால் கைது செய்யப்பட்டார்.  தலித்துகளின் விடிவெள்ளி மாயாவதி விவசாயிகளிடம் குறைந்த விலைக்கு நிலத்தை வாங்கி தன் குடும்பத்தார் செழிக்க வகை செய்கிறார் என்றொரு குற்றச்சாட்டு.

காங்கிரஸ் என்றால் நீலிக் கண்ணீர் வடிப்பது. மராட்டியத்தில் விதர்பா விவசாயிகள், பிளாச்சிமடா விவசாயிகள், ஆந்திரத்தில் விவசாயிகள் பாதிக்கப்பட்ட போதொல்லாம் அவர்களோடு இந்த கருணைமிக்க இளம் தலைவர் வயலில் களை எடுத்துக் கொண்டிருந்தார்

என்ன செய்வது,   தான் செய்வதை அடுத்தவன் செய்தால் குற்றம்.  50 ஆண்டுகால ஆண்டைகளின் வாரிசு பயிற்சி எடுக்கும் வகை இதுதான்

ஞாயிறு, மே 8

அன்னையர் தினம் தேவையா?

கடந்த பத்து பதினைந்து ஆண்டுகளாக ஏதாவது ஒரு தினத்தை எதற்காகவது கொண்டாட வேண்டுமென ஒதுக்க அதன்படி இன்றைய தினத்தை அன்னையர் தினமாக ஊடகங்கள் முதல் வியாபார நிறுவனங்கள் வரை கொண்டாடி கொண்டிருக்கின்றனர்.

உண்மையில் சொல்லுங்கள் எத்தனை பேர் அன்னையை மதிக்கின்றனர்.  சரி வேண்டாம் பெண்ணை மதிக்கின்றனர்.

ஒரு பட்டிமன்றம் தாயா, தாரமா.  பட்டினத்தார்  முதல் இன்றுவரை தாய் என்றே சொல்கின்றனர்.  அது என்ன தாரம்தானே தாயானாள்.  ஏன் பொண்டாட்டி தினம் என ஒன்று இல்லை.  காதலர் தினம் இருக்கிறது.  இந்த உலகத்தில் பொண்டாட்டி என்பது கீழ்தரம். காதலியும் அன்னையும் உயர்தரம்.  

பெண் பெண்டாட்டியானால் மதிப்பில்லை என்றாகிறது.  அன்னை என்றால் பாலூட்டி சீராட்டி என பட்டித்தாரும் பரிதவிக்கிறார். பரதேசியும் பரிதவிக்கின்றான்.

எத்தனை அன்னையர் முதியோர் இல்லத்தில், எத்தனை பெண்டாட்டிகள் கோர்ட் வாசலில்.

இது போன்ற தினங்கள் வியாபார நோக்கம் கொண்டது நாம் அதற்கு பலியாக வேண்டாம்

பெண் சக மனுஷி, ஆண் சக மனிதன், மனிதம் பேணுவோம்.  அனைவரையும் மதிப்போம்


சனி, மே 7

ஊடகமும் அதன் முதலாளிகளும்


கீழ்காணும் செய்தி ஒரு நண்பர் மின்னஞ்ஞல் மூலம் அனுப்பினார்.  இதன் உண்மைகளை நீங்களே முடிவு செய்யுங்கள்.  செய்தியின் முடிவில் பார்க்கும் போது இச்செய்தி யாருக்காக எழுதப்பட்டது என தெளிவாக தெரிகிறது.  எனினும் உங்களோடு பகிர்ந்து கொள்கிறேன்














Andhra Jyothi: The Muslim party of Hyderabad known as MIM along with a Congress Minister has purchase this Telugu daily very recently.









வெள்ளி, மே 6

அட்சய திரிதியை


அள்ள அள்ள குறையாதாம்
அட்சய திரிதியில்
தங்கம் வாங்கினால்

வாங்கி வந்தேன்
வசதிக்கு தக்க
வளர்ந்ததோ என்றால்…

இருந்த தங்கத்தில்
இழந்தேன் ஒருகல்
இருந்தாலும் காத்திருக்கிறேன்

வசதி இருந்தால்
வங்கி பெட்டகத்தில்
வைக்குமளவு வாங்கலாம்

காசில்லை என்றால்
ஒசியிலும் வாராது
எத்தனை திரிதியை
     கடந்தாலும் வாராது

காசுள்ளவனுக்கே திரிதியை
இல்லாதவனுக்கு
கடன் வாங்கி திரிதியை

திரிதியை
கடன்காரன் ஆக்குமென்றால்
வாழ்நாள் முழுதும்
      நீ கடன்காரனே

திங்கள், மே 2

ஒசாமா-ஒபாமா



பத்து ஆண்டுகள்
பரலோகம் அனுப்ப
பார் ஆளும்
பாரக் ஒபமாவிற்கு

இங்கே
ஒபமா ஒப்புமைதான்
ஒபமா,புஷ்
இன்னும்
எத்தனை பெயர் வைத்தாலும்
பத்தாண்டுகள் என்பது......

மனித நாகரிகத்தின்
மதங்களின்
அச்சமூட்டும்
நச்சு - ஓசாமா

உலகின்
எந்த மூலையிலும்
தன்னால் வாழ முடியுமென்று
தொடை தட்டியவன்
தொலைந்து போனான்

ஓசாமாவின் ரசிகர்கள்
துக்கப்படலாம்
ஹமாசும்
வேதனைப்படலாம்

எதிரியின் எதிரி
நண்பனென்று
இன்னும் பலர்
பட்டியலில் சேரலாம்

ஊட்டி வளர்த்தவனே
உயிரை கொய்து விட்டான்
போட்டி என்பதால்
போட்டு தள்ளி விட்டான்

அரசியலின்
கொடுக்கல் வாங்கல் இது
ஆம் ஓபாமாவின்
வாங்கல்

ஒருவேளை
அடுத்த நான்காண்டு
அவரின் பதவிக்கான
உயிர் வாங்கலோ...........





மேல்பாதி திரௌபதி

ஆறுகால ஆராதனையின்றி அம்மன் அவதியுறுவதாய் ஆங்கொரு புலம்பல் அரவமில்லாது ஆலயத்தை திறந்து ஆராதனை முடிந்தவுடன் மூடிடவும் பக்த கோடிகள் பக்கம் வந்த...